சங்கப் பனுவல் படி!
விழுப்புரம் ‘சங்க இலக்கியப்
பொதும்பர்’ என்ற அமைப்பு, ‘சங்கப் பனுவல்
படி’ என்ற ஈற்றடி அமைத்து வெண்பா எழுதித்தருமாறு கேட்டபோது எழுதித்தந்த வெண்பாவை
அனைவருடைய பார்வைக்குமாகக் கீழே தருகிறேன்:
இங்கிவ் வுலகில்நீ யாரென் றறிந்துணர
மங்காப் புகழ்ப்பண்பின் மாண்பறிய – கங்குலாய்த்
தங்கியுள இற்றையிழி தாழ்வகற்ற எந்தமிழா
சங்கப் பனுவல் படி.
----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக