புதன், 24 ஜூலை, 2013

பேதைகளே!

பேதைகளே!


பெறலருந் தாயைத் தமிழை மறந்தீர்! பெயரிழந்தீர்!
விறல்வர லாறு விடுதலை யற்றீர்! வீழ்ந்திழிவீர்!
திறலறத் தாழ்ந்தே திருத்தமிழ் மீளாத் திரிதலுறப்
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!

அறங்கூ றருந்தமிழ் ஆன்ற முதன்மொழி யாமதனை
உறங்கி அழிப்பீர்! உயர்தனிச் செம்மை உலகறிந்தும்
இறப்புற விட்டீர்! இளையவர் கற்க இசைவளியீர்!
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!                                                (தெளிதமிழ்(17-7-2013) - புதுவையிலிருந்து வரும் திங்கள் இதழில் வெளிவந்தவை.)  

1 கருத்து:

  1. Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு